இரண்டாம் உலகப்போரில் இந்தியாவின் பங்களிப்பு உலக அளவில் பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்பட்டு, ஒதுக்கி விடப்படுகிறது. ஏன், இந்தியாவில் கூட அதைப்பற்றிய விழிப்புணர்வோ, தகவல்களோ மிகக் குறைவு. சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி விவரிக்கும் பள்ளிப் பாடத்திட்டங்கள் கூட, இரண்டாம் உலகப் போரை சில வரிகளில் கடந்து விடுகின்றன.