
கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட முன்னாள் ஆயர் ஃபிராங்கோ முல்லக்கலின் ஜாமீன் மனுவை கேரள உயநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரியை 13 முறை பலாத்காரம் செய்ததாக ஜலந்தரில் ஆயராக இருந்த ஃபிராங்கோ முல்லக்கல் மீது குற்றம்சாட்டப்படுகிறது. இவர், கடந்த மாதம் 21-ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், அக்டோபர் 6-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே அவரது வழக்கறிஞர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜாமின் கோரிய மனு நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் புதனன்று கேரள உயர்நீதிமன்றத்தில் ஃபிராங்கோ ஜாமின் கோரிய மனு விசாரணைக்கு வந்தது.
ஜாமீன் மறுப்பு
அவரை ஜாமினில் விடுவித்தால், விசாரணை பாதிக்கப்படும் எனவும், சாட்சிகளைக் களைக்கக் கூடும் என்றும் போலீசார் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, அவரது ஜாமின் மனு உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.