குழந்தைகள் மேல் பாலியல் வன்கொடுமை – பிஞ்சுகளின் நரகம்

சமீபத்தில் சென்னை ஆவடியில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக வந்த புகாரை தொடர்ந்து 3 மாஜிஸ்திரேட்டுகள் அதிரடி ஆய்வு நடத்தினர். சம்பவம் தொடர்பாக காப்பக ஊரிமையாளர் விமலா ஜேக்கப் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தமிழகத்தில் தனியார் மகளிர் விடுதிகள் மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கியிருக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வரும் நிலையில் குழந்தைகள் காப்பகத்திலும் பெண் குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லைகள் தலை தூக்கியுள்ளன.

இது ஒரு உதாரணம் மட்டுமே. இது போல பல சமீப காலங்களில் நடைபெறுவது வெளியே தெரிய வருகிறது. ஆனால் அதன் பின் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கவுன்சலிங் கொடுக்கப்படுகின்றனவா, திரும்பவும் அந்தக் காப்பகங்கள் இயங்க அனுமதி அளிக்கப் படுகிறதா, (அந்தக் காப்பகங்கள் முதலில் மூடப் படுகின்றனவா என்பதே பெரிய கேள்வி!) அப்படி என்றால் இந்தக் கொடிய செயல்களை செய்பவர்களுக்குத் தண்டனையே கிடைப்பதில்லையா போன்ற கேள்விகளுக்கு சமுதாயம் பதிலை எதிர்பார்க்கிறது.

கிறிஸ்துவமும் தொண்டு  நிறுவனமும்

பெரும்பாலான தொண்டு நிறுவனங்கள் கிறிஸ்துவ மதத்தினராலேயே நடத்தப்பட்டு வருகின்றன. அதனால் சமூகத்திலும் அவர்கள் மேல் ஒரு மதிப்பும் சேவை செய்பவர்கள் என்கிற மரியாதையும் தானாக ஒட்டிக் கொள்கிறது. இது நம் நாட்டில் சுதந்திரம் வருவதற்கு முன்பே இருந்து அவர்கள் செய்து வரும் செயல். பள்ளிகள், கல்லூரிகள், காப்பகங்கள் பல கிறிஸ்துவ அமைப்புகளே ஆகும். ஆனால் அவர்கள் உண்மையில் அந்த தொண்டு நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டில் இருந்து தொண்டு நிறுவனம் என்கிற போர்வையில் பெரும் அளவில் பணம் கொண்டுவரப்பட்டு மதம் மாற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்டன என்பதும் பல விசாரணைகளில் தற்போது தெரிய வந்துள்ளது.  மேலும் பல சட்ட விரோதமான நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன. ஆனால் போதுமான தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப் படுவதில்லையா அல்லது மேற்கொள்ளப்பட்டும் அதன் முடிவுகள் நமக்கு ஊடகங்களும் காவல் துறையும் தெரிவிப்பதில்லையா என்று தெரியவில்லை.

இதில் மிகப் பெரிய சமூகப் பிரச்சினை இந்த மாதிரி காப்பகங்களை சிறுபான்மையினரான கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் நடத்துவதால் தவறுகள் தட்டிக் கேட்கப்படும்போது அவர்களின் சிறுபான்மை நிலை அவர்களின் நிறுவனங்களை மதத்துடன் தொடர்புப் படுத்தி சட்டத்தில் இருக்கும் ஓட்டை வழியாக வெளியே வந்துவிடுகின்றனர். இஸ்லாம் காப்பகங்களில் பள்ளிகளில் தவறு நடந்தால் ஷரியத் சட்டம் தான் அமலுக்கு வருகிறது. அதே போல கிறிஸ்து பாதிரியார்கள் தவறு இழைக்கும்போது அவர்களின் நிறுவனமே தவறு செய்தவர்களுக்குப் பாதுக்கப்பையும் அளிக்கிறது! பாதிக்கப்பட்டவர்கள் எங்கே போய் நீதி கேட்பார்கள்!

ஆயுள் தண்டனை

குழந்தைகள் மேல் நடக்கும் பாலியல் வன்கொடுமையை செய்தியாகப் படித்துக் கடந்து விடுகிறோம். பாதிக்கப்பட்ட சிறுவர்கள் ஆயுளுக்கும் அதன் வலியை, வேதனையை, குற்ற உணர்ச்சியை, வெறுப்பை, பயத்தை வாழ்நாள் முழுக்க சுமக்கிறார்கள். பாதிக்கப்பட்ட நொடியே அவர்கள் பால்யம் தொலைகிறது! ஆயுள் தண்டனை இதுவே!

கிறுத்துவப் பாதிரியார்கள் தவறான பாலியல் உறவு வைத்துக் கொள்வது ஏன்?

பாவ மன்னிப்பு

அவர்களின் மத நம்பிக்கை/கொள்கைகள் படி பெரும்பாலான கிறிஸ்துவ பிரிவுகளில் பாதிரியார்கள் பிரம்மச்சரிய விரத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அது சாத்தியப்படுகிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். இதில் விருப்பப்பட்டு கன்னியாஸ்த்ரீகளும் பாதிரியார்களும் உறவு வைத்துக் கொள்வது ஒரு வகை என்றால் confession என்கிற கிறிஸ்துவ கோட்பாடு படி செய்த தவறுகளை பாதிரியார்களிடம் வந்து ஒப்புக் கொண்டு மன்னிப்பைக் கோரும் பழக்கத்தை மாசு படுத்தி அவர்களின் தவறுகளை வெளியே சொல்லிவிடுவேன் என்று மிரட்டி நிறைய பெண்களை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தி தங்கள் இச்சைகளைத் தீர்த்துக் கொள்வது இன்னொரு முறையாக இருந்து வருகிறது. ஆனால் இந்த விஷயம் வெளியே வருவதில்லை. கன்னியா ஸ்திரீகளும் கன்னித் தன்மை கெடாமல் இருக்கும் விரதத்தை மேற்கொண்டிருப்பதால் அவர்கள் பாதிரியார்களுடன் உறவு வைத்துக் கொள்வதை வெளியே யாரிடமும் சொல்வதில். அதில் மத கோட்பாடுகளை அவமதிப்பத்தைத் தவிர இருதாராரும் ஒப்புக் கொண்டு மேற்கொள்ளும் உறவு முறையில் வேறு எந்தக் குற்றமும் இல்லை. ஆனால் நம்பிக்கையுடன் வந்து பாவங்களுக்கு மன்னிப்பு கேட்பவர்களை பலவந்தப்படுத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது பெரும் குற்றம்.

பாதிரியார்களும் பாலியல் வன்முறையும்

இதில் குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்துவது மிகப் பெரிய சமூக அவலமாக உள்ளது. ஆனால் வெளியே இக்குற்றம் நடப்பதே தெரியாமல் மறைத்து வைப்பதில் சர்ச்சுக்கு நிகர் சர்ச் தான். இது இந்தியாவில் நடக்கும் குற்றம் மட்டும் இல்லை. உலகளாவிய வகையில் கத்தோலிக்க சர்ச்கள் அனைத்திலும் அமேரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ஆப்ரிக்க, ஆசியா என்று அனைத்துக் கண்டங்களிலும் பாலியல் பலாத்காரம் இவர்களால் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதை மூடி மறைத்து பாதிக்கப்பட்டவர்களை மிரட்டியோ பணத்தைக் கொடுத்தோ விஷயம் வெளியே வராமல் பாதுகாத்து விடுகின்றனர் அந்த சமய நிறுவனங்கள். இந்த இழி நிலை தலைமை வேடிகன் வரை போகிறது.

நம் நாட்டைப் பொறுத்த வரை தொடர்ந்து கிறுத்துவப் பாதிரியார்கள் பாலியல் விவகாரங்களில் தாராளமாக ஈடுபடுவது தெரிந்தும், கிறுஸ்த்துவ மேலிடங்கள் அமைதியாக இருப்பது, அவற்றின் ஒத்துழைப்பு அல்லது உடன்பாடு முதலியவற்றைக் காட்டுவது போலாகும். கிறிஸ்துவ மேலிடத்தில் யாரும் கேட்பார் இல்லாவிட்டாலும் நம் நாட்டின் சட்டத்தை அமல்படுத்தவேண்டிய அதிகாரிகள் மெத்தனமாக இருப்பது, அல்லது கண்டும் காணாமல் போவது அத்தகைய கொடுங்கோலர்களுக்கு சாதகமாக இருகிறது. சர்ச்சின் சட்டமீறல்கள் அரசு துறைகளில் புரையோடிப்போன ஊழலை தன் காட்டுகிறது.

பாதிரியார்கள் தொடர்ந்து பாலியல் வன்முறையில் ஈடுபடுவது, எச்சரிக்கை செய்த பின்னும் தொடர்வது, அவர்கள் பலரின் வாழ்க்கையை ஆராயும்போது பலருக்கும் இது ஒரு நோயாகவே மாறியுள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம். வியாதியில் பீடித்துள்ள அவர்களை வேலை நீக்கம் செய்து தகுந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யாமல் இருப்பதால் பல அப்பாவிகளின் வாழ்க்கைகள் இவர்களால் நாசமகின்றன.

பென்சில்வேனியாவில் சுமார் 300 ரோமன் கத்தோலிக்க பாதிரிமார்களால்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட  சிறுவர், சிறுமியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1940-களிலிருந்து முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள்  பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆட்படுத்தப்பட்டனர் என்று தற்போது மாகாண தலைமை நீதிபதிகள் குழு அதிர்ச்சி அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. மூத்த சர்ச் அதிகாரிகளை குற்றம் சாட்டிய இந்த அறிக்கையில் தற்போது வாஷிங்டன் டி.சியில் ஆர்ச்பிஷப்பாக உள்ளவரையும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட குழந்தைகள், பலாத்காரம் செய்த பாதிரிமார்கள் குறித்த உண்மையான  ஆவணங்கள்  கிடைக்கவில்லை.  ரகசிய சர்ச் ஆவணங்கள் தொலைந்தபடியால் பெற முடியவில்லை என்று இந்த அறிக்கைத் தெரிவித்துள்ளது. 900 பக்க அதிர்ச்சி அறிக்கையில் தலைமை ஜூரி இது பற்றி கூறும்போது,“நிறுவன ரீதியான சீர்த்திருத்தங்கள் இருந்தும், சர்ச்சின் தனிப்பட்ட தலைவர்கள் பொதுமக்களுக்கான பொறுப்பிலிருந்து தவறியுள்ளனர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் வன்முறை

“சிறுவர், சிறுமியரை பாதிரிமார்கள் பலாத்காரம் செய்துள்ளனர், கடவுளின் மனிதர்களான இவர்கள், இதற்குப் பொறுப்பேற்காததுடன், ஒன்றுமே செய்யவில்லை என்பதுடன் இந்தப் பாவச்செயலை மறைத்தும் உள்ளனர்” தவறு செய்தவர்களைக் காத்ததுடன், தவறு செய்தவர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க சர்ச் பாலியல் சுரண்டல்கள் எனும் புத்தகத்தை அவ்வளவு எளிதில் மூடிவிட முடியாது என்கிறார் தலைமை ஜூரி.

இதில் தவறிழைத்த நூறு பாதிரியார்கள் ஏற்கெனவே இறந்து போய்விட்டனர். பலர் ஓய்வு பெற்றுவிட்டனர், சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர், சிலர் விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.விசாரணை இன்னும் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அட்டர்னி ஜெனரல் ஜோஷ் ஷபிரோ தெரிவித்தார். சுமார் 17 கோடி  கத்தோலிக்கர்களை பிரதிநிதித்துவம் செய்யும் 8 பாதிரிமார்களில் 6 பேர் மீது கடுமையான விசாரணை நடைபெற்றுள்ளதாக அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார். பாலியல் பலாத்காரம் செய்து விட்டு குற்றம்சாட்டப்பட்ட கிறிஸ்துவ மத குருமார்களை போலீஸில் காட்டிக் கொடுக்கவும் மறுத்துள்ளனர். இரகசியக் காப்பு உடன்படிக்கைகளைக் காட்டி பாதிக்கப்பட்டவர்களை மிரட்டியுள்ளனர்.

நியு மெக்சிகோ, நெப்ராஸ்கா, நியு யார்க், மிஸ்ஸௌரி, பென்சில்வேனியா ஆகிய ஐந்து அமெரிக்க மாநிலங்களில் அந்தந்த மாநில அட்டர்னி ஜெனெரல்கள் இந்த விஷயமாக குற்ற விசாரணை மேற்கொள்ள ஆணையிட்டுள்ளனர். பழைய, மறைக்கப்பட்ட பாதிரியார்கள் மேல் வன்கொடுமை புகார்கள், வழக்குகளின் கோப்புகளை திறந்து பார்க்க ஆணையிட்டுள்ளனர். இது நாள் வரை மறைக்கப்பட்ட கத்தோலிக்கப் பாதிரிமார்கள் செய்த செக்ஸ் குற்றங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவர நியு யார்க் அட்டர்னி ஜெநேறலின் அலுவலகம் மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்து வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன, முன்னூறு பாதிரியார்கள் எழுபது வருட காலத்தில் பலப் பல குற்றங்களை செய்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. பென்சில்வேனியாவில் சிறு பொறியாகத் தொடங்கியது இப்ப காட்டுத்தீயாக பல மாநிலங்களிலும் கிறிஸ்துவ பாதிரிமார்கள் மேல் நடவடிக்கை எடுக்கக் காரணமாகியுள்ளது. பல நாடுகளில் குழந்தைகள் மேல் தொடுக்கப்பட்ட பாலியல் வன்முறைக்கு எதிராக சட்டப்பூர்வமான குற்ற விசாரணையும் நடவடிக்கையும் பாதிரியார்கள் மேல் எடுக்கப்பட்டாலும் அமெரிக்காவில் பென்சில்வேனியா தான் இதை செய்யும் முதல் மாகாணமாக உள்ளது.

இந்த விசாரணையில் தொண்டு நிறுவனங்கள் பல விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளன. தொண்டு நிறுவனங்களின் அட்டகாசம் தான் இந்தியாவிலும் நடைபெறுகிறது. ஆனால் இதர நாடுகளிலும் அமெரிக்காவிலும் எடுக்கப்படும் நடவடிக்கை போல் இங்கு எப்பொழுது நடவடிக்கை எடுக்கப் படும் என்று தெரியவில்லை. அமெரிக்காவில் முக்கியமாக பென்சில்வேனியா மாகாணத்தில் பல பாலியல் குற்றங்கள் உறுதி படுத்தப்பட்டாலும் குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பி விடுவர். ஏனென்றால் நீதிமன்றத்தில் குற்றத்தின் மேல் வழக்குத் தொடுக்கும் கால அவகாசம் முடிந்து விட்டது. இது குற்றவாளிகளுக்கு சாதகமான ஒன்றாகிவிட்டது. ஆனாலும் குற்றங்கள் வெளிச்சத்துக்கு வருவதே ஒரு மிகப் பெரிய சமூக மாற்றம் என்று கொள்ள வேண்டும்.

பாதிரியார்களால் சீரழியும் குடும்பங்கள்

கேரளாவின் மலங்கரை ஆர்தோடக்ஸ் கிறிஸ்துவ சபையின் கீழ் இயங்கி வரும் சர்ச்சின் பாதிரியார்கள் ஐவர் மீது மே 7-ம் தேதி புகார் கடிதம் ஒன்று வந்துள்ளது. பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை பாதிரியார்களே பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார்.

ஆனிக்காடு பகுதியைச் சேர்ந்த ஜான்சன் என்பவர் துபாயில் பணிப்புரிந்து வருவதால் அவரின் மனைவியும், இரு குழந்தைகளும் கேரளாவில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், துபாயில் இருந்த ஜான்சனுக்கு தன் மனைவி கிரெடிட்கார்டு மூலம் அதிக தொகை செலவு செய்த செய்தி செல்போனுக்கு மெசேஜ் ஆக வந்ததை அடுத்து விசாரித்ததில் அதிர்ச்சி அடைந்துள்ளார். திருமணத்திற்கு முன்பாகவே ஜான்சன் மனைவி அவரின் உறவினரும், பாதிரியாரான ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை தன் கணவனிடம் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளார். இரண்டு குழந்தைகளை பெற்ற பிறகு அதன் தாக்கம் மனதில் உறுத்தலாக இருந்து வந்துள்ளது. ஆகையால், சர்ச்சில் பாவமன்னிப்பு கேட்க சென்றுள்ளார் ஜான்சனின் மனைவி. சர்ச்சில் பாவமன்னிப்பு என்பது நம்மை அறிந்தும், அறியாமலும் செய்த தவறுகளை இறைவனுக்கு தொண்டு செய்யும் பாதிரியாரிடம் கூறி மன்னிப்பு கேட்பதாகும். இதனால் மனதில் இருக்கும் சுமை தீரும் என்பது அவர்களின் நம்பிக்கை.

ஆனால், பாவமன்னிப்பு அளிக்க வேண்டிய பாதிரியாரே மன்னிக்க முடியாத பாவத்தை செய்துள்ளார். கடந்த கால சம்பவத்தை வெளியில் கூற கூடாது என்றால் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று மிரட்டப்பட்டுள்ளார் ஜான்சனின் மனைவி. அதன்பின், அவரை ஹோட்டலில் வைத்து பலாத்காரம் செய்து அதை வீடியோ, புகைப்படம் எடுத்துள்ளார் அந்த பாதிரியார். அதுமட்டுமின்றி ஜான்சனின் மனைவி பற்றி சர்ச்சில் உள்ள மற்ற பாதிரியார்களிடமும் பகிர்ந்து உள்ளார்.

இதையடுத்து, ” மற்ற பாதிரியார்களும் ஜான்சன் மனைவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதை அறிந்த ஜான்சன் கத்தோலிக்க சபை பிஷப்பிடம் மனைவி சொன்ன தகவலின்படி 8 பேர் மீது புகார் தெரிவித்தார். மேலும், ஜான்சன் மனைவியை தொடர்ந்து பலாத்காரம் செய்ததோடு மட்டுமல்லாமல் பணமும் பறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் “.

ஆர்தோடக்ஸ் கிறிஸ்துவ சர்ச்சில் நாடு முழுவதிலும் இருந்து வந்த 30-க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் உள்ளனர். புகார் தெரிவிக்கப்பட்ட பாதிரியார்களில் 4 பேர் கேரளாவையும், ஒருவர் டெல்லியையும் சேர்ந்தவர். இந்த புகார் தொடர்பாக 5 பாதிரியார்களையும் விடுப்பில் செல்லுமாறு சர்ச் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் கேரளப் பெண் பாதிரியார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட செய்தி வைரலாகி கோப அலையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் ஜான்சன் மற்றொருவருடன் தனது மனைவிக்கு நடந்த கொடுமைகள் பற்றி பேசும் ஆடியோ பதிவு வெளியாகி வைரலாகி வருகிறது.

இச்சம்பவம் குறித்து சர்ச் சபை விசாரணை நடத்தி வருகிறது. ஜூலை மாதத்தின் இறுதியில் விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்வதாகவும், காவல்துறையில் புகார் தெரிவிக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர். பெண் பாதிக்கப்பட்ட சம்பவம் உண்மையா என்று எங்களுக்கு தெரியவில்லை. முழுமையான விசாரணைக்கு பிறகே புகார் உண்மையா அல்லது பொய்யா என்று கூற இயலும். விசாரணை முடிந்த பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றியும் கூற முடியும் என சர்ச்சின் செய்தித்தொடர்பாளர் பி.சி.எலியாஸ் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டு உண்மை என அறிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சர்ச்சின் செயலாளர் பிஜி ஓம்மேன் தெரிவித்துள்ளார். சர்ச்சின் வேண்டுகோளுக்கு இணங்க காவல்துறையில் பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் புகார் ஏதும் அளிக்கப்படவில்லை. எனினும், சமூக வலைத்தளங்களில் இச்சம்பவத்திற்கு கண்டனங்கள் தொடர்ந்து எழுகிறது. மறுபுறம் சர்ச் தரப்பில் பாதிரியார்களை காப்பாற்றும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இறை வாழ்கையில் ஈடுபடுவதாகக் கூறி சுகபோக வாழ்வை அனுபவித்துக் கொண்டு பெண்களை பாலியல் வன்புணர்வு செய்யும் மதகுருக்கள் இங்கு அதிகளவில் உள்ளனர். இறைவனுக்கு தொண்டு செய்கிறோம் என மதத்தின் பெயரைப் கவசமாக அணிந்து கொடூரமான செயல்கள் அனைத்தையும் செய்து வருகிறார்கள். பாவமன்னிப்பு அளிக்க வேண்டியவர்கள் பாவத்தை செய்கிறார்கள். தவறு இழைப்பது யாராக இருந்தாலும், எந்த மதத்தை சேர்ந்தவராக இருப்பினும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

சமீபத்தில், கேரளாவில் வின்சென்சியன் கத்தோலிக் சர்ச் குழுமத்தில் 24 வருடங்களாக அருட்தந்தையாகப் பணியாற்றிய பாதிரியார் கே.பி.ஷிபு, தனது பணியை ராஜினாமா செய்து விட்டு, “ஒரு பாதிரியாரின் இதயம்” (The Heart of a Priest-“Oru Vaidikante Hrudayamitha”) என்னும் புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் பாதிரியார்களிடம் நிலவும் முறையற்ற பாலியல் வேட்கையும் அதிகாரம் மற்றும் பணத்திற்கான பேராசையும் மலிந்து கிடப்பதைப் புட்டுப் புட்டு வைக்கிறார். பணத்திற்கும், அதிகாரத்திற்குமான பேராசை அவர்களை நெறிபிறழ்பவர்களாகவும் கயவர்களாகவும் மாற்றி விட்டதாகக் கூறுகிறார்.

மேலும், 60 சதவீத பாதிரியார்கள் முறையற்ற பாலுறவுத் தொடர்பு வைத்திருப்பதாகவும், தேவனின் தூதர்கள் என்று கூறிக் கொள்ளும் இவர்கள் அன்பையும் கருணையையும் பொழிவதற்குப் பதிலாக, ஏழைமை, பெண்கள் மற்றும் அனாதைக் குழந்தைகளின் ஆதரவற்ற நிலையைப் பயன்படுத்தி கொஞ்சமும் வெட்கமே இல்லாமல், அவர்களை முறைகேடாகத் துய்க்கின்றனர்.

பிரம்மச்சர்யத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளும் முறையற்ற காம வாழ்க்கை, நீலப்படங்கள் பார்த்தல், ஓரினச்சேர்க்கை உள்பட எல்லாத் தீய ஒழுக்கங்களிலும் ஈடுபடுகின்றனர் என்கிறார்.

திருச்சபை முன்னாள் உறுப்பினர்களின், பாதிரி வாழ்க்கையைக் குறித்த குற்ற ஒப்புதல்களே கத்தோலிக்கத் தரப்புகளுக்குள் நிகழும் தற்போதைய சூடான விவாதம்.

பாதிரியார் கே.பி.ஷிபு, பத்திரிகையாளர் பிரதீப் கிருஷ்ணனுக்கு அளித்த பிரத்யேக பேட்டியிலிருந்து…

  1. நீங்கள் ஏன் சர்ச்சில் இருந்து வெளியேறினீர்கள்? அதற்கான காரணங்கள் என்ன?

எனக்கு நேர்ந்த தொடர்ந்த தொந்தரவுகளும், கடும் அவமானங்களுமே நான் சர்ச்சை விட்டு வெளியேறக் காரணம். சர்ச் பணத்தைக் கையாளும் விதமும் அதன் செக்ஸ் விஷயங்களும் எனக்குக் கொஞ்சமும் உடன்பாடும் திருப்தியும் அளிக்கவில்லை. இங்கிருக்கும் ஏராளமான பாதிரியார்களும் கன்னியாஸ்திரீகளும் மக்களின் நம்பிக்கையைக் கேலிக்குள்ளாக்குவதுபோல் ஏராளமான பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவதைக் கண்கூடாகக் காண்கிறேன். பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் குறைந்த அளவே ஊதியம் பெறுவதால், தவறான செய்கைகளுக்கும், பாலியல் தொழிலில் ஈடுபடவும் எளிதில் இரையாகின்றனர்.

2.மதம் மாற்றுவதைப் பற்றி உங்கள் கருத்து?

மதம் மாற்றுவது ஒரு மதத்தை விட இன்னொன்றுதான் உயர்ந்தது என்பதை நிலைநாட்டவே நிகழ்த்தப்படுகிறது. அடி ஆழத்தில் ஒவ்வொரு மதமும் அதனதன் பாதையில் அந்தந்தக் கடவுளரின் செய்தியை மக்களுக்குக் கூறுகின்றன. மதமாற்றம் செய்வதற்கு உண்மையில், சரியான- ஒப்புக்கொள்ளத்தக்க- காரணம் ஏதும் கிடையாது. மதம் மாறிய பின்னர்தான், கடவுளின் பெயரும் வழிபடும் முறையையும் தவிர வேறொன்றும் ஸ்பெஷலாக ஏதுமில்லை என்று உணருகிறார்கள்.

3.கேரளாவில் முரிஞ்ஞூர், போட்டா போன்ற இடங்களில் கூட்டம் கூட்டமாக மக்கள் கலந்து கொள்ளும் டிவைன் ரிட்ரீட் மையங்கள் பற்றி உங்கள் கருத்தென்ன? அங்கு இருப்பவர்கள் பாலியல் கொடுமைகளுக்கும் மன உளைச்சல்களுக்கு ஆளாதலும், ஏன், கொலைகள் கூட நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளனவே?

அது போன்ற ரெட்ரீட் சென்ட்டர்களின் மேலாளர்களாக இருக்கும் பாதிரியார்கள் காம இச்சையைப் பூர்த்தி செய்து காசு பார்ப்பவர்களாக இருக்கின்றனர். பாவம் பற்றிய கோட்பாட்டின் மீது வைக்கப்படும் அதீத முக்கியத்துவம், குற்றவுணர்ச்சியை மக்கள் மனதில் வளர்த்து, பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகளின் தாளத்திற்கேற்ப இவர்களை ஆட வைக்கிறது. “பாவத்தின் சம்பளம் மரணம்” என்று பாவத்தைச் சொல்லி சொல்லி பயமுறுத்தியே தன்னை ஒரு கவர்ச்சிகரமான, பூதாகரமான இயக்கமாக மாற்ற முயல்வதில் கத்தோலிக்க சர்ச்சுகள் முன்னோடிகளாக உள்ளன. ஆனால் இது தோற்றுப் போன ஒரு யுத்தி. சுயநலப் பாதிரியார்களோ, பாவமன்னிப்பின் போது பெறப்பட்ட அந்தரங்க உண்மைகளை/செய்திகளை வைத்து, அவர்களையே பிளாக்மெயில் செய்கின்றனர். கடவுளின் அருளைப் பெற வரும் அப்பாவிப் பெண்களை இங்குள்ள பாதிரியார்கள் பாலியல் கொடுமை செய்கின்றனர். இக்குற்றச் செயல்களை உள்ளூர்க்காவல் நிலையத்தின் உதவியுடன் மூடிமறைத்து விடுகின்றனர். எதிர்ப்பவர்களைக் கருணையின்றி “முடித்து” விடுவதும் நடக்கிறது. இது போன்ற எல்லா சமூக விரோத நடவடிக்கைகளும் சர்ச்சின் அதிகார, அரசியல், சமய செல்வாக்கினால் கமுக்கமாக அமுக்கப்படுகின்றன.

  1. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், சர்ச்சுகளில் பாதிரியார்கள் செய்யும் ஏராளமான பாலியல் கொடுமைகளை (சிறார்கள் மற்றும் பெண்களை பலாத்காரம் செய்வது, ஓரினச்சேர்க்கை) நாம் கேள்விப்படுகிறோம்; ஆனால், இந்தியாவிலோ, இது போன்ற விஷயங்கள் திருச்சபையினரின் அதிகார பலத்தால் மூடி மறைக்கப்படுகின்றன. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

உண்மையில் இந்தியாவில், பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் இதுபோன்ற பாலியல் தொடர்புகளில் பெருமளவில் ஈடுபடுகின்றனர். நிறைய திருச்சபைக் குழுக்களில் ஓரினச்சேர்க்கை ஒரு சாதாரண விஷயம். அவ்வளவு ஏன், நிறையப் பாதிரியார்களின், கன்னியாஸ்திரிகளின் குழந்தைகள் சர்ச் நடத்தும் அநாதை இல்லங்களிலேயே வளர்ந்து வருகின்றன. மேற்கு நாடுகளில், அங்குள்ள சிவில் சொசைட்டி, இம்மாதிரி முறைகேடுகளை நீதிமன்றங்களுக்கு எடுத்துச்சென்று, பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு பெற்றுத் தருகின்றது. ஆனால், இந்திய சூழ்நிலையோ, பரிதாபகரமானது. இங்குள்ள சிவில் சொசைட்டியும், மனித உரிமை அமைப்புகளும், இது போன்ற முறைகேடுகளை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்வதற்குத் தயங்கி, அஞ்சுகின்றன. பாதிக்கப்பட்டவர்களை அச்சுறுத்தி நீதிமன்றங்களுக்குப் போகவிடாமல் செய்து விடுகின்றனர் இந்தப் ”புனிதர்கள்”.

  1. கத்தோலிக்கத் திருச்சபையின் கடுமையான சட்ட்திட்டங்களுக்கும், நெறிமுறைகளுக்கும் ஈடுகொடுக்கமுடியவில்லை என்பதாலேயே, உங்களைப் போன்றோரும், சிஸ்டர் ஜெஸ்மி போன்றோரும் அதை விட்டு விலகியதாகக் குற்றம் சாட்டப்படுகிறதே?

கத்தோலிக்க சர்ச்சின் அமைப்பு முறையே, நான் அதை விட்டு வெளியேறுவதற்குக் காரணம்.எல்லாவிதமான முறைகேடுகளிலும் அவர்கள் ஈடுபடுகின்றனர். கத்தோலிக்கக் குழாமைத் தவிர வேறு எந்தப் பிரிவும் பிரம்மச்சர்யத்தை வலியுறுத்துவதில்லை. சிஸ்டர் ஜெஸ்மியும் நானும் ஊழல்கள் மலிந்துவிட்ட கத்தோலிக்க அமைப்பின் பலிகடாக்களாக ஆக்கப்பட்டோம். கத்தோலிக்க சர்ச்களின் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால் அவை எங்களை எதிர்க்கின்றன.

  1. கேரளாவில், சர்ச்சுகளுக்கான சட்டத்தைக் கொண்டுவருவதன் அவசியம் பற்றி விவாதங்கள் நடக்கின்றன.பிஷப்களுக்கும், பாதிரிகளுக்கும் சரிபார்ப்புகள் ஏதுமற்ற ஏகபோக அதிகாரங்களை வழங்குவது முறையா?

சர்ச் சட்டம் உடனடியாக இயற்றப்பட வேண்டும். இல்லையென்றால், யாரும் அறியாமல் திருச்சபையினர் கொள்ளைகள் மற்றும் சொத்துச் சுருட்டல்கள் கவனிப்பாரற்று தொடர்ந்து கொண்டேயிருக்கும். சிறுபான்மை நிறுவனங்களாக, நிதிஆதாரம் பெற்று இயங்கி வரும் அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் அரசாங்கம் கையகப்படுத்தி நடத்த வேண்டும். அப்போதுதான், திருச்சபை இதை ஒரு வணிகமாகச் செய்யமுடியாமல் போகும். சிறுபான்மை, பெரும்பான்மை என்று மக்களைப் பிரிக்கும் கருத்தே ஒன்றுபட்ட இந்தியாவைக் கேள்விக்குள்ளாக்குகிறது. திருச்சபைக் குழுமத்தின் பங்கு ஆன்மிகத்தோடு மட்டும் தொடர்புடையதாக இருக்க வேண்டும். சர்ச்சுகளின் சொத்துக்களை சமூக மக்களே ஏற்று நிர்வகிக்க வேண்டும்; பிஷப்களும், பாதிரியார்களும் அல்ல. சர்ச் சொத்துக்களுக்கு அவர்கள் சொந்தக்காரர்களாக இருக்கக் கூடாது. தற்போது சர்ச்சின் சொத்துகள் வாடிகனில் இருக்கும் தலைமை போப்பினால் உருவாக்கப்பட்ட திருச்சபைக் கட்டளை சட்டப்படி நிர்வகிக்கப்படுகின்றன. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஒன்று. இந்தியாவில் இருக்கும் குடிமக்கள் எப்படி இன்னொரு வெளிநாட்டுச் சட்டத்தின்கீழ் உட்படுத்தப்படுவர்?

7.கிறிஸ்தவ அடக்குமுறை இருப்பதாக– குறிப்பாக, வட இந்தியாவில்- நிறைய கிறிஸ்தவ குழுக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.ஜாபாவில் நிகழ்ந்த சம்பவம் ஒரு தனிப்பட்ட குற்றம் என்றும் எந்த ஒரு அமைப்பின் உள்திட்டமில்லையென்பதும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன.ஆனால், சர்ச் அதிகாரம், இந்து அமைப்புகளின் மீதே தொடர்ந்து பழிசுமத்துகின்றதே. இதைப் பற்றிய உங்கள் கருத்து?

கிறிஸ்தவ மதமாற்றம் ஒரு தனிமனிதனிடம் எந்த ஒரு விளைவையும் ஏற்படுத்துவதில்லை- வழிபடப்படும் கடவுளின் பெயரும், வழிபடும் முறையும் மட்டுமே மாறுகின்றன.வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பணம் சமய போதனைகளுக்காகவும் மதமாற்றத்திற்காகவும் இங்குள்ள திருச்சபைகளுக்கு வழங்கப்படுகின்றன.

8.வட இந்தியாவில் அங்கொன்றும், இங்கொன்றும் நிகழும் துரதிர்ஷ்ட நிகழ்வுகளைக் கடுமையாகத் தாக்கும் திருச்சபை, கேரளாவில் கன்னியாஸ்திரிகளுக்கு நிகழ்ந்த கொலை மற்றும் அடக்குமுறைகளைப் பற்றி மெளனம் சாதிப்பதேன்?

அவர்கள் கைககள் கறைபடிந்தவை என்பதற்கு இது ஆதாரம். மிஷனரி நடவடிக்கைகள் யாவும் பணம் பண்ணுவதையே மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றன. இப்போது சர்ச்சில் சேரும் இளைஞர்கள் இயேசுவின் அன்புக்காகவோ, அவர் சொன்ன செய்திக்காகவோ சேர்வதில்லை. பகட்டான வாழ்க்கையில் விருப்பம் உள்ளவர்களே சர்ச்சில் சேருகின்றனர்.

9.மதபோதகர்கள் அரசியலில் ஈடுபட்டு, இந்தச் சமூகத்தைத் தனது அதிகார வரம்பிற்குள் ஆண்டு கொண்டிருக்கிறனர். திருச்சபையினரின் பிடியிலிருந்து சாமானிய மக்களுக்கு விடிவு கிடைக்குமென்று நாம் நம்ப முடியுமா?

மக்களை அதிகாரம் செய்யவும், தன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரவுமே கத்தோலிக்க சர்ச் கல்வி நிலையங்களையும் மற்றும் ஏராளமான நிறுவனங்களையும் ஏற்று நடத்துகின்றது. திருச்சபையின் அரசியல் ஈடுபாடுகள் இதை உறுதி செய்கின்றன.சர்ச்களுக்கு சொந்தமான நிறுவனங்களின் மொத்த விலைமதிப்பு நம்மை வாய்பிளக்கச் செய்யும் வண்ணம் அசாதாரணமானது. பெரும்பான்மை கிறிஸ்தவர்களுக்கு, திருச்சபை, பணத்தின் பின்னும் அதிகாரத்தின் பின்னும் செல்வது தெரியும். தெரிந்தாலும், அவர்களால் ஒன்றும் செய்வதற்கில்லை. இந்த சூழ்நிலையை காலம் மாற்றும் என்று நம்புவோமாக.

10.இந்தியக் கிறிஸ்தவம் தனது அடையாளத்தை இழந்த்தாக நீங்கள் நினைக்கிறீர்களா? இந்து மதத்தின் மிகத்தொன்மையான- ஆனால் எக்காலத்திற்கும் ஏற்ற நவீன ஆன்மிக மரபை, அதன் தாத்பர்யத்தை கிறிஸ்தவம் உள்வாங்கிக் கொண்டுள்ளதா?

இந்து மதம் என்பது ஒரு வாழ்க்கை முறை என்கிற விஷயத்தில் சர்ச் போட்டியிடவே முடியாது.

11.அங்காடி வளாகங்கள்,மருத்துவமனைகள்,பள்ளிகள்,தொழில் நிறுவனங்களை இயக்கும் ஒரு வணிக ஸ்தாபனமாக வளர்ந்து விட்ட சர்ச்சிடம், ஆன்மிகத்தை எந்த அளவுக்கு எதிர்பார்க்க முடியும்?

சர்ச் ஒரு மிகப் பெரும் வணிக ஸ்தாபனமாக அசுர வளர்ச்சி கண்டுவிட்டது உண்மைதான். திருச்சபையின் நோக்கமெல்லாம் பணம் சம்பாதிப்பதும், இலாபமீட்டுவதும்தான். தர்மஸ்தாபனங்களாகத் தங்களைக் கூறிக்கொள்ளும் இந்த சர்ச்கள், முறையாக வரிக் கணக்குகளை ஆவணப்படுத்திப் பதிவு செய்வதுமில்லை; தங்களது பணியாளர்களுக்கு ஒழுங்கான ஊதியத்தை, சரிவரக் கொடுப்பதுமில்லை. சர்ச்களில் நடைபெறும் முறைகேடுகளைக் களைய அரசு அதன் நிர்வாகத்தை எடுத்து, ஒழுங்கான சட்டதிட்டங்களுக்குட்படுத்தி, நடத்தவேண்டும். எல்லா மக்களையும் கிறிஸ்தவர்களாக, முஸ்லீம்களாக, இந்துக்களாகக் கருதாமல் இந்தியக் குடிமக்களாகவே, அனைவரையும் எந்தவிதப் பாகுபாடின்றி நடத்த வேண்டும்.

12.சர்ச்– குறிப்பாக கத்தோலிக்க சர்ச், அமெரிக்கா, ஐரோப்பாவில் கடும் நெருக்கடியை எதிர்கொள்வதால், அவைகள் ஆன்ம அறுவடைக்கு, மூன்றாம் உலக நாடுகளைக் குறிவைக்கின்றன.மதமாற்றத்தையே தீவிர இலக்காகக் கொண்ட இந்த நடவடிக்கை தொன்மமான, தனக்கென்று ஒரு மரபு கொண்ட இந்தச் சமூகத்தில் பிரிவினையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தாதா?

ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் சர்ச் வழிமுறைகளைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவது சர்ச்சுக்கு ஒரு பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இந்த நாடுகளில் இருக்கும் சர்ச்சுகள் தங்களது ஆன்ம அறுவடைக்கு, கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளையே நம்பி இருக்கின்றன. மதமாற்றத்திற்குப் பெருமளவில் பணம், பொருள்கள் வாரி வழங்கப்படுகின்றன. இது, சமூகத்தில் குழப்பத்தையே உருவாக்கும். இந்தியப் பழங்குடி மக்கள் தங்களது சடங்குகள், கலாசாரம், மதத்தைக் கைவிடுவதற்கு இலக்காக்கப் பட்டுள்ளனர். இந்துமதம் அவர்களது சுய அடையாளங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கு அனுமதித்திருக்கையில், கிறிஸ்தவமோ, அவர்களது அடையாளங்களை வேரோடு பிடுங்கி எறிந்திருக்கிறது. இது பழங்குடிகளுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் சண்டைகளை உருவாக்குகிறது.

13.கடந்த 100 வருடங்களாக, காலனி ஆதிக்கத்தினரால் பிரமிப்பூட்டும் பணபலம் மற்றும் ஆள்பலத்துடன் கிறிஸ்தவம் இந்தியாவில் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு இந்துக்களை ஆன்ம அறுவடை செய்யமுடியவில்லையே. ஏன்?

இந்தியாவில், சிறப்பு வாய்ந்த இந்து தர்மத்திடம் கிறிஸ்தவம் அடைந்தது ஒரு மிகப் பெரும் தோல்வியையே. கிறிஸ்தவம், இந்தியாவில், தனது சொந்த அடையாளத்தை இழந்து நிற்கிறது. சாதிப் பிரிவுகளை அதிகபட்சம் சுரண்டி, தன் ஆதாயத்திற்குப் பயன்படுத்தி, மதம் மாற்ற முயற்சித்த போதிலும், அதில் வெற்றி கிடைக்கவில்லை. இந்து மதத்தில் உள்ள சாதிப்பிரிவுகளைக் களைந்து, எல்லோரும் சமமே என்கிற நிலை வந்தால், இந்து தர்மம் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும். அப்புறம் ஒருவரும் மதம் மாற மாட்டார்கள்– எவ்வளவுதான் அள்ளிக் கொடுத்தாலும்.

ஷிபு அவர்களின் வலைப்பதிவு

புத்தகம் & பதிப்பாளர் பற்றிய விவரங்கள்:

“The Heart of a Priest” (Oru Vaidikante Hrudayamitha)

Green Books India Pvt Ltd
Ayyanthole, Thrissur- 680003
Kerala, India
Ph :0487-2361038, 2364439
[email protected] ……….[மூலம்: ப்ரதீப் கிருஷ்ணன்
தமிழில்: டாக்டர் பிரகாஷ்;தகவல் உதவி;tamilhindu.com இணைய தளம் ]..புகைப்படம்-1The Heart of a Priest” (Oru Vaidikante Hrudayamitha) புத்தகம்;, The Heart of a Priest” (Oru Vaidikante Hrudayamitha)

இந்து மதத்தில் இந்த மாதிரி பாலியல் தொல்லைகள் தரும் மத குருக்கள் இல்லையா என்று கேட்கலாம். நிச்சயாமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருப்பதில்லை. எந்த மாற்று சட்டமும் அவர்களை தப்பிக்க விடுவதில்லை. பண பலம், சமூக அந்தஸ்த்தின் மூலம் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கும் பலர் எல்லா மதத்திலேயும் உள்ளனர். அதே போல பலர் தண்டனையில் இருந்து தப்பியிருக்கலாம். ஆனால் இந்து மதத்தில் எந்தத் தலைமை மடமும் குற்றம் சாட்டப்பட்ட இந்து மத குருக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதில்லை. இந்தியன் பீனல் சட்டப்படி எவ்வளவு பெரிய மத குருவாக இருந்தாலும் அவர்கள் மேல் வழக்குப் போட முடியும். உதாரணம் காஞ்சி சங்கர மடத்தின் மிகப் பெரிய மடாதிபதி சங்கராச்சாரியார் மேல் வழக்குப் போடப்பட்டு அவர் சில காலம் சிறைத் தண்டனையும் அனுபவித்தார்.

இது மாதிரி ஒரு இஸ்லாம் மதத் தலைவரையோ கிறிஸ்துவ மதத் தலைவரையோ கைது செய்து நடவடிக்கை எடுக்க முடியாது. இஸ்லாம் ஷரியத் சட்டம் என்கிற போர்வையில் இந்தியன் பீனல் கோட் சொல்வதை ஏற்பதில்லை. அதே போல கிறுத்துவ மதத்திலோ அதன் தலைமை வேடிகனே குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது.

குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பு

இந்நிலை விரைவில் மாற மக்களுக்கு முதலில் விழிப்புணர்வு வர வேண்டும். அடுத்து நாட்டில் நடக்கும் கேடுகளை கவனித்து நம்மால் இயன்ற அளவு அவற்றை தடுக்கவோ மாற்றவோ முயல வேண்டும். தவறு நடக்கிறது என்றால் புகார் அளிக்க வேண்டும்.



Reference: The New York Times, The Washington Post

 

~பல்லவி

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.