
ஆர் எஸ் எஸ் இயக்கம் விளம்பரமின்றி மகத்தான பல மக்கள் சேவை பணிகளை இந்தியா முழுவதும் செய்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே.
கோவை மாநகரில் மாநகராட்சி தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் குடியிருப்பு வெரைட்டி ஹால் ரோட்டில் உள்ள CMC காலனி பகுதியாகும் . ஊர் முழுதும் சுத்தமாக வைத்திருக்கும் இந்த ஏழை உழைப்பாளிகள் வாழும் இப்பகுதி சரிவர பராமரிப்பின்றி இருந்து வந்தது.
ஆர் எஸ் எஸ் சின் சேவா சங்கிக் சேவை நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக கோவை மாநகரை சார்ந்த ஸ்வயம் சேவகர்களும் சேவகிகளும், சுவாமி விவேகானந்தா சேவா கேந்திரம் சார்பாக CMC காலனி பகுதியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இவர்களின் சேவையை அந்த பகுதி வாழ் மக்கள் பெரிதும் பாராட்டி நன்றி கூறினார்.