ரொம்ப நாள் கழிச்சு பாட்டையாவை ஆலமரத்தடியிலே பாத்ததுல எளந்தாரிப் பயலுவளுக்கெல்லாம் ஒரே குஷியாப் போச்சு. பாட்டையாகிட்டே கேக்கறதுக்கு ஒருபாடு கேள்வி வெச்சிருந்தானுவ. பாட்டையா வழக்கம்போல எதுவும் பேசாம எல்லாரையும் பாத்து ஒரு மாதிரி சிரிச்சிக்கிட்டு இருந்தாரு. இன்னிக்கு என்னடா கேக்கப் போறீங்க? அதையும் ஒரு கை பாத்துடறேன்னு சொல்லாம சொன்னாப் போல இருந்தது அவரோட பார்வையும் சிரிப்பும். மொள்ள நம்ம கணேசு எழுந்தான். “பாட்டையா, நேத்தைக்கு என்ன ஆச்சு […]