வடகிழக்குப் பருவமழைக்கு முன்னோட்டமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையின் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பகலில் விட்டு விட்டு மழை பெய்த நிலையில், நள்ளிரவில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் ராயப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. புறநகர்ப் பகுதிகளிலும் இரவில் மழை வெளுத்து வாங்கியது. காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, ஈரோடு, நாகை மாவட்டங்களில் பலத்த மழை […]