ஏ.டி.எம் (ATM) எந்திரங்களில் ஸ்கிம்மர் கருவியைப் பொருத்தி வாடிக்கையாளர்களின் கார்டு தகவலை சேகரித்து அவர்கள் கணக்கில் உள்ள பணத்தை சுலபமாகத் திருடுகின்றனர் சமூக விரோதிகள். திருடப்பட்ட கார்டு தகவல்களை வைத்து போலி கார்டு தயாரித்து பணத்தை கொள்ளையடிக்கும் முறை ஒன்று. மற்றொன்று, திருடப்பட்ட கார்டு கணக்குகளில் இருக்கும் பணத்தை வேறு ஒரு டிஜிட்டல் வாலெட் (Digital wallet) கணக்குக்கு மாற்றி உலகின் எந்த மூலையில் இருந்தும் அவற்றை செலவு செய்வது.