பிரதமரை சந்தித்தார் தமிழக முதல்வர்

தமிழக முதல்வர் மாண்புமிகு திரு எடப்பாடி பழனிச்சாமி இன்று புதுடில்லியில் பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களை சந்தித்து பேசினார்.

அப்போது கீழ்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை பிரதமரிடம் அளித்தார்.

கோரிக்கைகள் ..

  • உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிலுவையில் உள்ள மானிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும்
  • தமிழக வளர்ச்சி திட்டங்களுக்குத் தேவையான நிதியை வழங்க வேண்டும்
  • மதுரை தோப்பூரில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை உடனடியாக அமைக்க வேண்டும்
  • மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்
  • சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பெயர் சூட்ட வேண்டும்
  • மேகதாது திட்டத்தை செயல்படுத்த கர்நாடக மாநில அரசை அனுமதிக்கக் கூடாது

 

பெட்ரோல், டீசல் மீதான வரி

பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைப்பது பற்றி பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்தார்.
டிடிவி தினகரன்-ஓபிஎஸ் சந்திப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே அதற்கு பதிலளித்துவிட்டார் என முதல்வர் தெரிவித்தார்

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி கூறினார்.

புகைப்படம் : புதியதலைமுறை

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.